Saturday 26 November 2011

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொ ருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ் வினி குமா ர் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட் டாயம் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்க ங்கள் சட்டம் கொண்டு வர வேண் டும் என்று கருத்து தெரிவி த்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டா ய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நா ட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அம லுக்கு வந்தது.
மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009  சட்டத் தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண் டும்.
எங்கே பதிவு செய்வது? உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய் யவேண்டும்.
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திரும ணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு க்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாள் களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாத வர்கள், அடுத்த 60 நாள்களுக்கு ள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக் கும். இணையத்தில் கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய் து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத் தில் தாக்கல் செய்ய வேண் டும். படிவத் தில் கணவன், மனைவி இருவரது புகைப் படங்களை யும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப் படத்தை யும் இணைக்க வேண்டும்.
மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக் கான அத்தாட்சி, அடை யாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்க வேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்க வேண்டும். திரு மண த்தை நடத்தி வைத்த மத குருமாரும்/ஐயரும் மனுவில் கை யொப்பம் இட வேண்டும்.
மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்க ளும் மனுவில் சாட்சி கையெழுத்து போ டவேண்டும். மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில் லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப் படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம்.
திருமணங்கள் நடைபெறும் குறிப்பி ட்ட சில கோயில்களிலேயே கூட, திரு மணங்களைப் பதிவு செய்வதற்கு வழி வகை செய்யப்பட்டிருப்பதாக ஒரு தக வல் உண்டு.
மேற்குறிப்பிட்ட விவரங்களைக் கொ ண்டு சம்மந்தப்பட்ட சார் பதிவாளரைச் சந்தித்து, உங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!