Saturday 17 March 2012

காதல் தூவிய க-விதைகள்


எனக்குள் காதல் 
தூவிய உன் 
க-விதைகள் 
தீர்ந்து போனால் என்ன?
எனக்குள் விழுந்த 
காதல்  விதைகள் 
முளைத்துக்கொண்டே
தான் இருக்கும்!
-----------
நீ
முத்தமிட்ட
பாகம் மட்டும்
கர்வத்தில் இருக்க
மற்ற பாகங்கள் 
வேலை நிறுத்தம் செய்கின்றன
பொறாமையில்...
நீ வந்து மீண்டும்
முத்த பேச்சு 
வார்த்தை நடத்து!
------------
உன் 
ஆலயத்தில்
உன்னை போற்றும்
தீபங்கள் 
எத்தனை இருந்தாலும்
உனக்காக
ஆரத்தி காட்டப்படும்
கற்பூரம்
நானாக இருக்க வேண்டும்!
 ------------------
நீ முத்தமிடாத
பாகங்கள் எல்லாம்
துக்கம் அனுஷ்டிக்கின்றன!
கறுப்பு நிறத்தில்
மச்சங்களாய்!
----------------------------
நான் 
உன்னை எரிக்கும்
கனல் அல்ல...
நீ 
அணைப்பதற்காகவே
தன்னை 
எரித்துக்கொள்ளும்
கற்பூரம்!
-----------------
நட்புடன்