Thursday 17 May 2012

பசுவும் பன்றியும்


பாதிரியார் சவரிமுத்து வெகு நன்றாக பிரசங்கம் செய்து முடித்து பெருமிதத்துடன் நோக்கியபோது ஆரோக்கியசாமி  தலை குனிந்து விசனத்துடன் இருப்பதை கண்டார். "எல்லோருக்கும் நல்லதையே செய்யும் நல் மேய்ப்பர்   உன்னை சந்தோஷமாக வாழ வைத்திருக்கும்போது ஏன்  கவலை??  என்றார்.
"சாமி, என்னை எல்லோரும் கஞ்ச பிரபு கருமி என்கிறார்களே, என் சொத்து பூரா இந்த கோயிலுக்கு தானே எழுதி வச்சிருக்கேன். ??
தம்பி,  உனக்கு பசுவும் பன்றியும் என்கிற கதை சொல்றேன்  கேள். 
பசுவை பார்த்து பன்றி கேட்டது.  "உன்னை மட்டும் எல்லோரும் கொண்டாடறாங்களே, என்னை திட்றாங்களே. ; நீ பால்,மட்டும் தான் கொடுக்கிறே.  நான் என்னுடைய உடல் இறைச்சியையே கொடுக்கிறேன் வித விதமாக தின்னுட்டும்  இளக்காரமா பேசுறது ஏன்??
பசு சொல்லிச்சு :  "தம்பி நான் உயிரோடிருக்கும்போதே எல்லோருக்கும் பால் தினமும் தரேன்.   நீ செத்தப்புறம் தான்  உன் சதையை திங்கிறாங்க.  புரிஞ்சுதா.
இந்த கதை பாதிரியார் மூலம் ஆரோக்கியசாமிக்கு  புரியாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டியது " வாழும் போதே உன்னாலான உதவியை எப்போதும் இடைவிடாமல்   செய்.  பசுவாக உன்னையும் போற்றுவார்கள். "

 
__._,_.___