Monday 2 July 2012

நித்தியானந்தா!

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல
வழக்குகளை சந்தித்திருக்கிறது..
புதுமையான பல
வழக்குகளை சந்தித்து இருக்கிறது..
ஆனால், இந்த வழக்கு ஒன்றும்
விசித்திரமானதல்ல... வழக்காட
வந்திருக்கும் நானும் ஒன்றும்
புதுமையானவன் அல்ல..
வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக
ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில்
நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப்
பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன்
இப்படியெல்லாம்..
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான்
இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன்
என்று... இல்லை நிச்சியமாக இல்லை...
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும்
என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம்
காணப்படும்
மூடநம்பிக்கை வளரவேண்டும்
என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
ஏன்..?? காற்றுவரவேண்டும
ென்பதற்காகவா? இல்லை.. அந்த
நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும்
என்பதற்காக...
நடிகைகளை எனது காலைப்
பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்???
எனக்கு கால்
வலி என்பதனாலேயா?....இல்லை அவள்
நான் ஒரிஜினல் சாமியார்
என்று என்மீது வைத்திருக்கும்
அபரிமிதமான
நம்பிக்கையை நீக்குவதற்காக....
உனக்கேன் இவ்வளவு அக்கறை??,
உலகத்தில் யாருக்கும் இல்லாத
அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக
நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,
எனது சுயநலதிலே பொது நலமும்
கலந்து இருக்குறது,என்ன
ை குற்றவாளி என்கிறீர்களே, என்
வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானா
ல் நான் வாங்கிய அடிகள் எத்தனை,
மிதிகள் எத்தனை, உதைகள்
எத்தனை என்று கணக்கு பார்க்க
இயலும்...
நான் பாடசாலைக்குக் கூடப்
போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம்
படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக
இருந்ததில்லை ஆனால்
ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை,
என்னை அடித்து துவைப்பதற்கு முன்
தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன்
நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,
போலிச்சாமியார்களின்
தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன
விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம்
பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம்
என்றது...
என் பெயரோ நித்தியானந்தா,
கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத
ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால்
சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்,
ஏதாவது ஒரு மட்டமான படத்தில்
சாமியாராக நடித்திருக்கலாம்,
கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல்
என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த
பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப்
போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய
மடத்தை சுக்குநூறாக உடைத்தான்....
ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என்
ஜல்சா வீடியோவை யூ டியூப்பில்
போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....