Friday 18 January 2013

நானும் பெண்களை மதிப்பவன் தான்....

நானும் பெண்களை மதிப்பவன் தான்....

பெண்களுக்கு முழுசுதந்திரம் தரவேண்டும் என்பதை ஆதரிப்பவன்...
நீங்கள் சுயமாக எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை... அதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை...

உங்கள் பாதுகாப்புக்காக.... உங்கள் மீது உள்ள அக்கரையில் ஒரே ஒரு வேண்டுகோள்.....

உங்கள் உடல் அங்கங்கள் தெரிவதுபோல் ஆடை அணிவதை நீங்கள் மாற்ற வேண்டும்....
அப்படி நீங்கள் அணியும் உடை..
ரசிப்பவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிகிறது..
பெற்றோர், அண்ணன், தம்பிகள் கண்களுக்கு உருத்தலாய் தெரிகிறது...
காமகொடூறன் கண்களுக்கு வக்கிரமாய் தெரிகிறது...

அப்படி உடை அணிவதால் ஒருவர் கண்ணுக்கும் ஒரு போதும் நீ அழகாய் தெரிவதில்லை.....

ஆண்களை திருந்த சொல்லும் அதே நேரத்தில் உங்களையும் சிறிது மாற்றி கொள்வதில் தவறில்லை...

இதை நான் ஆணாதிக்க திமிறில் சொல்லவில்லை..
என் சகோதிரிகள் மீதிருக்கும் அக்கரையில் சொல்கிறேன்...
: