Tuesday 28 May 2013

மூடன் ராஜீவ் காந்தி மரணம்

1991ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அதிகாலையில் வழமைக்கு மாறாக நான் அடைத்து வைக்கப்ட்டிருந்த மதுரை சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்ட்டிருந்தது. இது குறித்து காவல் நின்ற அதிகாரியிடம் கேட்ட போது ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டார்கள் என்றார். இதைக் கேட்ட நான் சந்தோச மிகுதியில் அந்த அதிகாரிக்கு கைகுலுக்கிவிட்டேன். இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் உளவுத் துறையினருக்கு சென்றுவிட்டது. அதன் பலன் அடுத்தநாள் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் நான் விசாரிக்கப்பட்டேன்.

அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய ராணுவத்தால் நான் மூன்று தடவை துன்புறுத்தப்பட்டேன். எனது ஊரில் ஒரு ஆசிரியரின் மனைவி கற்பழிக்கப்ட்டார். எனது அயல் கிராமத்தில் இருந்த ஒரு ஜயர் பெண் கற்பழிக்கப்பட்டது மட்டுமன்றி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டபோது காரினுள் வைத்து தீயிட்டு கொல்லப்பட்டார். அதுமட்டுமன்றி எமது ஊரில் அனைவருக்கும் தெரிந்த ஒரு 70 வயதான பையித்தியக்காரக் கிழவiனை சுட்டுக் கொன்றுவிட்டு மூத்த விடுதலைப் புலி உறுப்பினர் கொல்லப்பட்டதாக கூறினார்கள். இவ்வாறு என் கண் முன்னே நிகழ்ந்த இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமான ஒருவர் கொல்லப்படும்போது நான் மகிழ்வு கொள்ளாமல் இருக்கமுடியுமா என அவ் அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.

ஜம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் அழிக்கப்ட்டன. பல பெண்கள் கற்பழிக்கப்ட்டார்கள். 80வயது கிழவியைக்கூட கற்பழித்த பெருமை இந்திய அமைதிப்படையையே சேரும். ராஜீவ் காந்தியை கொன்ற தானு கூட இந்திய ராணவத்தால் கற்பழிக்கப்பட்டவர் என்று கூறுகின்றனர். ஆனால் அது எந்தளவுதூரம் உண்மை என்று அறிய முடியவில்லை. எனினும் இந்த கொலை ஒட்டு மொத்த பாதிப்படைந்த அப்பாவி மக்களின் வெளிப்பாடே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால்தான் ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்றதும் யாழ்ப்பாண குடா நாடெங்கும் ஆயிரக் கணக்கான மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ஒருவருடைய மரணம் இனிப்பு வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டது என்பதை முதன் முதலாக அன்றுதான் நான் அறிந்தேன். இதிலிருந்தே அமைதிப்படை செய்த கொடூரத்தை புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

ஒரு கம்யுனிஸ்ட் என்ற வகையில் தனி மனித கொலைகள் தீர்வாகாது என்று கருதுபவன் நான். ரஸ்சியாவில் ஜார் மன்னனை கொல்ல முயன்று மரண தண்டனைக்குள்ளான தனது சகோதரன் பாதையை தோழர் லெனின் தவறு என்று கூறியுள்ளதை நான் படித்திரக்கிறேன். ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதாலேயே இந்தியா எமக்கு உதவவில்லை. இல்லையேல் இந் நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என சிலர் அப்பாவித்தனமாக தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது என்னவெனில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டாலும் ஈழம் மலர்ந்திருக்காது. ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் ஈழத்தை அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்னரே புலிகள் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியில் இந்திய உளவுப்படை “றோ” இறங்கிவிட்டதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் சிலர் கோரி வருகின்றனர். அப்படியாயின் முதலில் அமைதிப்படை என்ற பெயரில் வந்து அக்கிரமம் செய்த இந்திய ராணுவத்திற்கும் அதற்கு பொறுப்பானவர்களுக்கும் தண்டனை வழங்குங்கள். அதன் பின் ராஜிவ் கொலையை விசாரியங்கள். அதைவிடுத்து “நாம் பலமானவர்கள். நாம் அப்படித்தான் திமிர்தனமாக நடந்து கொள்வோம். நீங்கள்தான் நாம் செய்யும் அக்கிரமங்களை பொறுத்து தொடர்ந்தும் எமக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்ற கருதுவீர்களாயின் ராஜீவ் கொலை போன்ற பதிலடிகள் தொடரவே செய்யும்.