Saturday 28 September 2013

பெண்களை குறிவைக்கும் சிறுத்தை கும்பல்!

பெண்களை குறிவைக்கும் சிறுத்தை கும்பல்!
#

"பல சமூகத்தையும் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காதல் டார்ச்சர் கொடுத்து, சாதிக் கலவரத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்கவேண்டிய காவல்துறையினர், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'’ -என சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதி பள்ளி நிர்வாகிகள் பதட்டக்குரல் எழுப்புகிறார்கள். என்ன நடந்தது?

ஆத்தூரில் பாரதியார், சரஸ்வதி, க்ரீன்பார்க், மாருதி, தாகூர், பாவேந்தர், விவேகானந்தா என நிறைய மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. இதில் படிக்கும் மாணவிகளைக் குறிவைத்துக் களமிறங்கிய ஒரு கும்பல்தான், அவர்களுக்கு காதல் டார்ச்சர் கொடுக்கிறதாம்.

தங்கள் பெயரைச் சொல்ல விரும்பாத மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சிலர் நம்மிடம் ""எங்கள் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வேன்களில் அவங்கவங்க வீடுகளில் இருந்து, பள்ளிக்கு வந்து போவது வழக்கம். அப்படி போய்வரும் போது கடந்த 20 நாளா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சீருடையை அணிந்தபடி வரும் ஒரு கும்பல், வேகத்தடை இருக்கும் பகுதிகளில் நின்னுக்கிட்டு, அங்க வேன்கள் வேகம் குறைவா போகும்போது, துண்டுக் காகிதங்களில் தங்கள் போன் நம்பர்களை எழுதி, ’"ஐ லவ் யூ. நீயும் இந்த நம்பருக்கு எஸ்.எம்.எஸ் . பண்ணு'’என்கிற குறிப்போட, அந்தக் காகிதங்களைப் பள்ளி வேன்களுக்குள் இருக்கும் மாணவிகளை நோக்கி வீசிட்டுப் போகுது. இதைக்கண்டு மாணவிகள் மிரண்டு போறாங்க. இது குறித்து மாணவிகள் எங்களிடம் முறையிட்டாங்க. இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி காலை ஆத்தூர் ரயிலடி தெருவில் இருக்கும் காந்திநகர் சந்திப்பில் ஒரு டீமைப் போட்டு கண்காணிச்சோம். அப்ப ஒரு பள்ளி பேருந்துக்குள் சில இளைஞர்கள் துண்டுக் காகிதங்களை வீசியபடி, சில மாணவிகளின் பெயரை சொல்லிக் கத்தி னார்கள். அந்த இளைஞர்களை துரத்திய எங்க டீம் இளைஞர்கள், அவர்களில் இருவரை மடக்கியது. அதில் ஒருவன் திமிறி ஓட, ஒருத்தனை மட்டும் பிடித்து நேராக ஆத்தூர் காவல்நிலையத்துக்கு கொண்டுபோய் ஒப்படைக்கச் சொன்னோம். அந்த இளைஞன் வைத்திருந்த துண்டுக் காகிதங்களில் 8675172526 என்ற செல்போன் எண்ணும் இருந்தது. அதையும் போலீஸிடம் ஒப்படைச்சாங்க. பிடிபட்டவன் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும், அவனது அப்பா பெயர் அழகரசன் என்பதும், தப்பி ஓடியவன் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பெரியசாமி என்பதும் தெரியவந்தது. ஆனா நாங்க பிடிச்சுக் கொடுத்த பிரகாஷை போலீஸ்காரங்க வெளியே அனுப்பிட்டாங்க'' என்றார்கள் வருத்தமாய்.

ஏன் இப்படி என காக்கிகள் தரப்பிலேயே விசாரித்த போது, ""ஆய்வாளர் வந்து அந்தப் பயலை விசாரித்தார். அப்பதான் அவனும் அவன் ஆட்களும், இந்த பகுதியைச் சேர்ந்த கவுண்டர், செட்டியார், உடையார், நாயுடு, நாயக்கர் போன்ற பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்குத் தூண்டில் போடுவதை வழக்கமாக வச்சி ருப்பது தெரியவந்தது. அதோட இந்தப் பிரகாஷோட பின் னணி குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் முகம் வெளிறிப் போயிட்டார். ஏன்னா, இவனோட அண்ணன் அம்பேத்கார் மீது திருட்டு வழக்குகள் இருக்கு. ரொம்ப மோச மான ஆள். அவன் ஜாமீ னில் இருந்தபோது வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்க, நீதிமன்ற உத்தரவுப்படி, ஆத்தூர் உதவி ஆய்வாளராக இருந்த மணி மாறன், அந்த அம்பேத்காரை கைது செய்யப்போனார். அவரிடம் வரமுடி யாதுன்னு அவன் தகராறு செய்ய, எஸ்.ஐ. மணிமாறன் அந்த அம்பேத்காரை ரெண்டு தட்டு தட்டி தூக்கிக்கொண்டுவந்து உள்ளே தள்ளினார். இதில், தான் படுகாயமடைந்ததாகக் கூறிக்கொண்டு, அந்த அம்பேத்கார், மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொள்ள, போலீஸ் அராஜகம் ஒழிகன்னு சில அமைப்புகள் அவனுக்காகப் போராட்டத்தில் குதிக்க ஆரம்பிச்சிது. இதனால் எஸ்.ஐ. மணிமாறன் ஆத்தூரி லிருந்து மாற்றப்பட்டார். இப்படிப்பட்ட பலே பேர்வழியான அம்பேத்காரின் தம்பிதான் இந்த பிரகாஷ் என்று தெரிந்ததும், இன்ஸ்பெக்டர் ஜெய்சல், பிரகாஷ்மீது, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியதாக உப்புசப்பு இல்லாத பிரிவில் வழக்கைப் போட்டதோடு, அவனைத் தன் சொந்த ஜாமீனில் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டார்'' என்றனர் கிசுகிசுப்பாக.

பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமாரிடம், "எதற்காக அந்தப் பிரகாஷை வீட்டுக்கு அனுப்பினீர்கள்?' என்றோம். அவர் நம்மிடம் ‘""பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் கொடுத்தாங்க. நேரடியா பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தால்தான் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதால், மாணவி களிடமிருந்து புகாரை வாங்கிவரும்படி பள்ளியிடம் கேட்டிருந்தோம். குறிப்பிட்ட நேரம்வரை பார்த்தும் புகார் வரவில்லை... அதனால் அவனை சும்மா விடாமல் ஏதாவது ஒரு கேஸைப்போட்டு அனுப்பும்படி சொன்னேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. மாணவிகள் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்''’என்றார் கூலாய்.

இந்த விவகாரத்தைப் பா.ம.க. தரப்பு கையில் எடுக்கப் போகிறது என்ற தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்த, மாநில பா.ம.க. இளைஞரணி செயலாளர் அருளிடம் இது குறித்துக் கேட்டோம். அவரோ ""ஆமாங்க... இன்னைக்கு வேன்ல கடிதம் கொடுப்பானுங்க. நாளைக்கு ஸ்கூலுக்குள் போய்க் கொடுப்பானுங்க. அப்படியே விட்டா நேரா வீடுகளுக்கே போய்க் காதல் கடிதம் கொடுப்பானுங்க. இதையெல்லாம் போலீஸ் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கு. மாணவிகள் புகார் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பாங்க. அவங்க கோர்ட்டுக்கு போய் நிக்க முடியுமா? பள்ளிக்கூடத்தின் புகாரை எடுத்துக்க வேண்டியதுதானே. அதனால்தான் நாங்க போராட்டத்தில் குதிக்க ரெடியாகிக்கிட்டிருக்கோம்''’ என்றார் காட்டமாய்.

பிற சமூக மாணவிகளை டார்கெட் வைத்துக்கொண்டு துரத்தும் இந்த வில்லன்களை இனியாவது போலீஸ் வளைக்குமா?

-பெ.சிவசுப்ரமணியம்